தமிழ்நாடு

சமூக சேவகர் விருது அளிப்பு

DIN

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை கிளை ரெட் கிராஸ் தலைவர் தேவராசு, துணைத் தலைவர் ராஜா, சமுக ஆர்வலர் சசி என்கிற கோமதி, உதவி தலைமை ஆசிரியர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் ராமமூர்த்தி, விஜயகுமார், அந்தோணிசாமி,அன்பு,  கிருஷ்ணமூர்த்தி, முனுசாமி, உத்திரகுமார், இராமு, சிதம்பரம், மணிகண்டன், சமுத்திரன், சீனிவாசன் ஆகியோரை பாராட்டி சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது. 

நோய் தொற்று காலத்தில் கிருமிநாசினி அடித்தல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், இல்லாதோர்க்கு உணவு வழங்குதல், உள்பட பல்வேறு பணிகளை செய்த ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றும் அனைவருக்கும் சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT