ஜன.27-ல் சசிகலா விடுதலையாகிறார்: வழக்கறிஞர் தகவல்
ஜன.27ல் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுஜன.27-ல் சசிகலா விடுதலையாகிறார்: வழக்கறிஞர் தகவல்
ஜன.27ல் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
ஜன.27ல் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
1994-95 தாக்கல் செய்த வருமான வரிக்கணக்கில் ரூ. 4 லட்சம் குறைத்து காட்டியதாக சசிகலா மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜன.27-ல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா விடுதலையாக உள்ளதால் அவரிடம் விளக்கம் பெற்று பதிலளிக்க அவகாசம் தேவை என அவரது தரப்பு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சசிகலா வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று விசாரணையை பிப்.4ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.