முகப்பு
தமிழ்நாடு

திருமங்கலம் அருகே லாரி மீது வேன் மோதல்: இருவர் பலி

திருமங்கலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
திருமங்கலம் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் இருவர் பலி
பகிர்:


திருமங்கலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

திருமங்கலத்தை அடுத்த குதிரை சாரி குளத்தைச் சேர்ந்தவர் விஜயன்(27). இவர் மதுரையிலிருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை அதிகாலை  திருமங்கலம் நோக்கி மினி வேனில் வந்து கொண்டிருந்தார் .  கீழ உரப்பனூர் பகுதியைச் சேர்ந்த கவின்(27), உசிலம்பட்டி அடுத்த நக்கல பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன்(26) ஆகிய இருவரும் வேனின் முன்பக்கம் அமர்ந்து வந்தனர். அதேசமயம் தூத்துக்குடியில் இருந்து பழனிக்கு நிலக்கரியை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. லாரியை எட்டயபுரத்தை அடுத்த கீழ நம்பியார் புரம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல்(24) என்பவர் ஓட்டி வந்தார். 

வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் கப்பலூர் சுற்றுச் சாலையில் வந்துகொண்டிருந்தபோது லாரி பின்பக்கம் டயர் திடீரென வெடித்தது . உடனடியாக லாரியை இடது பக்கம் திருப்ப முயன்றபோது பின்பக்கம் வேகமாக வந்த வேன் லாரி மீது மோதியது.  இதில் வேனில் பயணம் செய்த கவின், சிலம்பரசன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேன் டிரைவர் விஜயன் லாரி டிரைவர் வெற்றிவேல் ஆகியோர் காயம் அடைந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உயிரிழந்த கவின் மற்றும் சிலம்பரசனின் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் காயமடைந்த விஜயன் மற்றும் வெற்றிவேலை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →