சென்னையில் கரோனா பாதிப்பு: மண்டலவாரியாக விவரம்
சென்னையில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4,044 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4,044 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்றைய நிலவரப்படி கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இதுவரை 2,27,575 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 4,044 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 2,21,333 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 2,198 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.