தமிழ்நாடு

வேதாரண்யம் மீனவர்கள் நால்வர் கரை திரும்பினர்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்திலிருந்து கடலுக்குள் சென்று சூறைக் காற்றுக்குள் சிக்கி அவதியுற்றுக் கரை திரும்புவது தாமதமானதால் தேடப்பட்டு வந்த மீனவர்கள் நால்வர் இன்று (ஜன.12) பகல் கரை திரும்பினர்.

ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார், ஜெயமூர்த்தி, பவித்திரன், நவீன் ஆகியோர். மீனவர்களான இவர்கள் நால்வரும் கண்ணாடி இழைப்படகு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றுள்ளனர்.

திங்கள்கிழமை கரை திரும்ப வேண்டிய இவர்கள், திங்கள்கிழமை ஏற்பட்ட கனமழை, சூறைக்காற்றில் சிக்கி கடலுக்குள் அவதியுற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் நால்வரும் தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில், மீனவர்கள் நால்வரும் செவ்வாய்க்கிழமை பகலில் பத்திரமாகப் படகுடன் கரை சேர்ந்தனர். 

ஆறுகாட்டுத்துறைக்கு கரை திரும்பி மீனவர்களுடன் மீன்வளத்துறையினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT