வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்ற கோ பூஜை 
தமிழ்நாடு

கம்பம் வேணுகோபால் கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை

தேனி மாவட்டம் கம்பம் யாதவ மடாலய வளாகத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

தேனி மாவட்டம் கம்பம் யாதவ மடாலய வளாகத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் நவநீதகிருஷ்ண யாதவ மடாலய வளாகத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் பஜனை மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை கோமாதா பூஜை நடைபெற்றது.

பூஜையையொட்டி  திருப்பாவையில் உள்ள 28வது பாடலான கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம் என்று துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்தனர். பின்னர்  வேணு கோபாலகிருஷ்ணனுக்கு  சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

முன்னதாக  கோவில் வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்ட பசு மற்றும் கன்றுக்குட்டிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, மாலை சூட்டி, அலங்காரம் செய்து, பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT