தமிழ்நாடு

உலக பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம், பாலமேட்டில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம், பாலமேட்டில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதைத்தொடர்ந்து பாரம்பரியமிக்க பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முதலில் பாலமேடு கிராம மகாலிங்க சாமி கோவில் காளைகள் உள்ளிட்ட கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வைக்கப்பட்டது. போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 783 காளைகள், 651 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு களத்தில் உள்ளனர். 

கரோனா பரவல் தடுப்புக்காக அரசின் நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் உடன் வரும் உதவியாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

SCROLL FOR NEXT