விழுப்புரத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பேரிடர் மேலாண்மை குழு 
தமிழ்நாடு

விழுப்புரத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழு ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் மேலாண்மை குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் மேலாண்மை குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் தாக்கிய 'நிவர்' புயல் காரணமாக பெய்த பலத்த மழையால், 1,626.6 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் சேதமடைந்தன. இதேபோல் 323.83 ஹெக்டேர் தோட்டப் பயிர்களும், 1,024 வீடுகள் சேதமடைந்தன.

இந்த பாதிப்புகளை ஏற்கனவே மத்திய குழுவினர் பார்வையிட்டு சென்றுள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழுவினர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கண்டமங்கலம் அருகே கலிஞ்சுக்குப்பம், வீராணம் பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட வாழைத்தோட்ட பயிர்கள், நெல் பயிர்கள், விழுப்புரம் தாமரைக் குளம் பகுதியில் வீடுகள் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டு, அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கணக்கெடுப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், திட்ட இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 நாள் சரிவுக்குப் பிறகு உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை! 26,000 புள்ளிகளில் நிஃப்டி!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!

மிசோரம் முன்னாள் ஆளுநர் ஸ்வராஜ் கௌஷல் காலமானார்! பிரதமர் மோடி இரங்கல்!

வாக்குவாதத்தில் மூதாட்டியை தாக்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அர்ஜூனன்!

கேட்டதை அள்ளித்தரும் அபிஜித் முகூர்த்தம்: சூட்சும ரகசியம்!

SCROLL FOR NEXT