தமிழ்நாடு

ஆப்பக்கூடல் அருகே மண் திட்டில்  இருசக்கர வாகனம் மோதியதில் விவசாய தொழிலாளி பலி

DIN

பவானி: பவானியை அடுத்த ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாய தொழிலாளி மண் திட்டில் மோதி விழுந்ததில் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், அத்தாணி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னகுட்டி மகன் முருகேசன் (42). விவசாயக் கூலித் தொழிலாளி. கடந்த இரு ஆண்டுகளாக கரட்டூரைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை இரவு வேலை செய்ததற்கான கூலிப் பணத்தை பெற தனது இருசக்கர வாகனத்தில் கரட்டூருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

கொண்டயம்பாளையம் அருகே வரும்போது சாலையோரத்தில் இருந்த மண் திட்டில் இருசக்கர வாகனம் மோதியதில் நிலைதடுமாறி விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

SCROLL FOR NEXT