முகப்பு
தமிழ்நாடு

தென் தமிழகத்தில் 5 நாள்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

அடுத்துவரும் ஐந்து நாள்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
வானிலை ஆய்வு மையம்
பகிர்:

அடுத்துவரும் ஐந்து நாள்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 

கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக அடுத்துவரும் ஐந்து நாள்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

அடுத்த இரண்டு நாள்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும். 

மீனவர்களுக்குகான எச்சரிக்கை

01.02.2021 மற்றும் 02.02.2021 மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் அப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →