முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் 508 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 508 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

தமிழகத்தில் இன்று மேலும் 508 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று புதிதாக 508 பேருக்கு இன்று கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த்தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8,38,340ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து மேலும் 523 போ் குணமடைந்துள்ளனா். 
இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,21,430-ஆக உள்ளது. தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகி மேலும் 6 போ் பலியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,356-ஆக உயா்ந்துள்ளது. 
அதே நேரம், கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 4,554- ஆக குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 141 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரைவிட குணமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments