முகப்பு
தமிழ்நாடு

இந்த விளம்பரங்களிலெல்லாம் உண்மையில்லை: ஏமாற வேண்டாம்

விளம்பரங்கள்.. புதிய பொருள்களை மக்களுக்கு அறிமுகம் செய்யவும், அதனை வாங்கத் தூண்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், அதுவே தற்போது பல மோசடிகளுக்கும் வழிகோலுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
இந்த விளம்பரங்களிலெல்லாம் உண்மையில்லை: ஏமாற வேண்டாம்
பகிர்:

விளம்பரங்கள்.. புதிய பொருள்களை மக்களுக்கு அறிமுகம் செய்யவும், அதனை வாங்கத் தூண்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், அதுவே தற்போது பல மோசடிகளுக்கும் வழிகோலுகிறது.

அதிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வரும் விளம்பரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மோசடி விளம்பரங்களாகவே இருக்கின்றன.

அது குறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளது. அதில், குறைந்த விலையில் பொருள்கள் விற்பனை செய்வதாக அங்கீகாரம் இல்லாத இணையதள பக்கத்திலிருந்து வரும் தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என்று ஈரோடு சைபர் கிரைம் காவல்நிலையம் சார்பில் அறிவுறத்தப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் குறைந்தவிலையில் ஆடை, அணிகலன்கள் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர்களுக்கு ஆசையை ஏற்படுத்தி, அதன் மூலம் பண மோசடி நடப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, மக்களே, இதுபோன்ற விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம்.
 

முழு கட்டுரையைப் படிக்க →