சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிப்பு
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையேயான புறநகர் ரயில் சேவை சுமார் 30 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையேயான புறநகர் ரயில் சேவை சுமார் 30 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னையால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்னல்கள் சரிவர இயங்காததால் ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.