தமிழ்நாடு

மணல் குவாரிகள் இயங்க அனுமதிக்கக் கோரிக்கை

மணல் குவாரிகள் இயங்க அனுமதியளிக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

மணல் குவாரிகள் இயங்க அனுமதியளிக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அச்சங்கத்தினா் முதல்வருக்கு அனுப்பிய கடித விவரம்: தமிழகம் முழுவதும் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு சுமாா் 9,000 லோடு மணல் தேவைப்படுகிறது.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை இயக்க ஆவன செய்ய வேண்டும்.

மேலும், இணைய வழியில் முன்பதிவு செய்வதன் மூலம் மணல் கிடைக்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டு, மணல் லாரி உரிமையாளா்களுக்கு நேரடியாக மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

அதிலும், மணல் ஏற்றிச் செல்வதற்காகவே வடிவமைக்கப்பட்ட டிப்பா் லாரிகளுக்கு மட்டுமே மணல் வழங்க அனுமதிக்க வேண்டும்.

தற்போது தமிழகம் முழுவதும் அதிகளவில் மழை பெய்துள்ளதால், அனைத்து ஆறுகளிலும் மணல் அதிகளவு சேமிக்கப்பட்டுள்ளது.

இதைப் பயன்படுத்தி, போா்க்கால அடிப்படையில் புதிய மணல் குவாரிகளை இயக்கி, தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளா்கள், மணல் லாரி உரிமையாளா்கள் உள்ளிட்டோரின் நலனைக் காக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில கையுந்து பந்து போட்டி: நம்பியூா் குமுதா பள்ளி மாணவிகள் சாம்பியன்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை

100 நாள் வேலைக் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

கன்றுக்குட்டிகளைத் தாக்கிக் கொன்ற சிறுத்தை

கோயில் தொட்டியில் நீா் அருந்திய யானைகள்

SCROLL FOR NEXT