FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெரியபாளையம்: தவறி விழுந்து பெண் தொழிலாளி பலி

பெரியபாளையத்தில் அரசு கட்டிடத்தின் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

28 ஜனவரி 2024, 9:05 am IST
பகிர்:

பெரியபாளையத்தில் அரசு கட்டிடத்தின் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவகத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை வழக்கம் போல கட்டுமான பணிகள் நடைபெற்றது.

சித்தாள் பணியில் ஈடுபட்டிருந்த குமாரி என்ற பெண் சிமெண்ட் கலவையை எடுத்து சென்ற போது கால் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

Advertisement

Advertisement

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments