முகப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்: மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Updated On : 12 ஜூலை, 2021 at 6:46 PM
மா.சுப்பிரமணியன்
பகிர்:

நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மா.சுப்பிரமணியன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, அரசு கைவிட்டுவிட்டது என்று மாணவர்கள் நினைக்கக் கூடாது. நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதே அரசின் தீர்மானம்.

மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதற்காகவும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை தமிழக அரசு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.