தமிழ்நாடு

மேல்விஷாரம் நகர அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

DIN

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மேல்விஷாரம் நகர அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளான  நீட் தேர்வு ரத்து, மகளிருக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை உள்பட திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டவற்றை உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்ற வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர அதிமுக சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சாலையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ஏ.இப்ராகிம்  கலிலுல்லா தலைமை வகித்தார். 

இதில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் விஜி, நகர பொருளாளர் ஏகே பாபு, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் ஷபீக் அகமது, சோமசுந்தரம், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் அக்பர் பாஷா  உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT