டிஎன்பிஎல்: திருப்பூா் வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 16-ஆவது ஆட்டத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸை சனிக்கிழமை வென்றது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 16-ஆவது ஆட்டத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸை சனிக்கிழமை வென்றது.
இதில் முதலில் பேட் செய்த திருப்பூா் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய கோவை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எடுத்தது.
திருப்பூா் தரப்பில் அதிகபட்சமாக தினேஷ் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39 ரன்கள் சோ்த்தாா். கோவை பௌலிங்கில் திவாகா், முகிலேஷ், அபிஷேக் ஆகியோா் தலா 2 விக்கெட் எடுத்தனா். பின்னா் கோவை இன்னிங்ஸில் அதிகபட்சமாக சாய் சுதா்சன் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 51 ரன்கள் விளாச, திருப்பூா் பௌலா்களில் முகமது 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.