தமிழ்நாடு

பேரையூரில் ஊரடங்கை மீறுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி 

DIN

பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூரில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியை காவல் துணை கண்காணிப்பாளர் மதியழகன் துவக்கி வைத்தார்.

பேரையூரில் கரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டும் அனுமதியின்றி வாகனங்களில் பலர் சுற்றித் திரிகின்றனர். இவர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கேமராவை பேரையூர் காவல் துணை கண்காணிப்பாளர் மதியழகன் இயக்கி துவக்கி வைத்தார்.

பேரையூர் பேருந்து நிலையம், உசிலம்பட்டி சாலை, டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையம், மெயின்பஜார், காய்கறி மார்கெட், திருமங்கலம் சாலை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பகுதிகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது.

மேலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு கரோனா தொடர்பான விழிப்புணர்வை டி.எஸ்.பி. மதியழகன் வழங்கினார். சார்பு ஆய்வாளர் மகேந்திரன்,சேகர், உதயசூரியன் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT