4 மாதக் குழந்தை கரோனாவுக்கு பலி
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 மாதக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 மாதக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மந்தக்குடிப்பட்டியைச் சேர்ந்த பெற்றோர் தங்களின் 4 மாதக் குழந்தைக்கு தொடர்ந்து கரோனா அறிகுறிகள் தென்படவே சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.
அங்கிருந்து கடந்த மே 27-ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தை கொண்டு வரப்பட்டது.
அந்தக் குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது 29-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு சிசு சிறப்பு சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனையுடன் கரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி 4 மாதக் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
மிகச்சிறிய வயதில் கரோனா சிகிச்சையில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவே முதல் முறை என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.