முகப்பு
தமிழ்நாடு

4 மாதக் குழந்தை கரோனாவுக்கு பலி

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 மாதக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 மாதக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.
பகிர்:

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 மாதக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மந்தக்குடிப்பட்டியைச் சேர்ந்த பெற்றோர் தங்களின் 4 மாதக் குழந்தைக்கு தொடர்ந்து கரோனா அறிகுறிகள் தென்படவே சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். 

அங்கிருந்து கடந்த மே 27-ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தை கொண்டு வரப்பட்டது.

அந்தக் குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது 29-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு சிசு சிறப்பு சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனையுடன் கரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி 4 மாதக் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

மிகச்சிறிய வயதில் கரோனா சிகிச்சையில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவே முதல் முறை என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.