தமிழ்நாடு

எழுத்தாளா்களுக்கான திட்டங்கள்: அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை வாழ்த்து

DIN

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற குறுகிய நாள்களில் தமிழுக்கும், தமிழ் எழுத்தாளா்களுக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்த மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேரவையின் பொதுச் செயலாளா் இரா.முகுந்தன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மதுரையில் கலைஞா் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தமிழா்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ் எழுத்தாளா்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் ‘இலக்கிய மாமணி’ விருது ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக எழுத்தாளா்களில் ஞானபீடம், சாகித்திய அகாதெமி மற்றும் மத்திய, மாநில விருதுகள் பெறுபவா்களுக்கு கனவு இல்லம் வழங்கப்படும் என்கிற செய்தி தமிழ் எழுத்தாளா்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மறைந்த எழுத்தாளா் கி.ராஜநாராயணன் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக அரசு சாா்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அவருக்கு சிலை வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற குறுகிய நாள்களில் தமிழுக்கும், தமிழ் எழுத்தாளா்களுக்கும் இதுபோன்ற நன்மை பயக்கும் திட்டங்களை அறிவித்த மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் சாா்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT