தமிழ்நாடு

ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

DIN

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கவுள்ளார். 

சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரையாற்ற முறைப்படி அழைப்பு  விடுப்பதற்காக  ஆளுநரை புரோஹித்தை முதல்வர் சந்திப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர் உரையுடன் இம்மாத இறுதியில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதில் ஆளுநர் உரையாற்ற முறைப்படி அவரை சந்தித்து அழைப்பு விடுக்கப்படுகிறது.

மேலும், இந்த சந்திப்பில் கரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வருடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மருத்துவத் துறை செயலர் உள்ளிட்டோரும் ஆளுநரைச் சந்திக்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT