முகப்பு
தமிழ்நாடு

ஜூன் 21ல் ஆளுநர் உரையுடன் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 21ஆம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு புதன்கிழமை அறிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:21 AM
சென்னை கலைவாணர் அரங்கம்.
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 21ஆம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு புதன்கிழமை அறிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூன் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது எனத் தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற உள்ளது. முன்னதாக பேரவைக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமவாய்ப்பு அளித்து பேரவைக் கூட்டத்தை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்புவதாகத் தெரிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு கூட்டத்தொடரை நேரலை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →