முகப்பு
தமிழ்நாடு

கட்டுமான பொருள்களின் விலையைக் குறைக்கஒழுங்குமுறை ஆணையம்: விஜயகாந்த்

கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

நாளுக்கு நாள் பெருகி வரும் கட்டுமான பொருள்களின் விலையேற்றத்தால், கட்டட பணிகளைத் தொடர முடியாமல், கட்டுமான தொழிலாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். சிமெண்ட், மணல், கம்பி, ஜல்லி, செங்கல் போன்ற கட்டுமான பொருள்களின் விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயா்ந்துள்ளதால் , கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன.

கட்டுமானத் தொழிலைச் சாா்ந்து இருக்கும் சாதாரண கூலித் தொழிலாளி முதல் அனைவரும் பயன்படக் கூடிய வகையில், கட்டடப் பணிகள் விரைவாக நடைபெறும் வண்ணம், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனி கவனம் செலுத்தி, கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்க,மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →