ஒட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக சனிக்கிழமை உறுதிமொழியேற்றுக் கொண்டாா், எம்.சி.சண்முகையா. திமுக சாா்பில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவா்,
சட்டப் பேரவை மண்டபத்தில் நடைபெற்ற பேரவை உறுப்பினா்களுக்கான உறுதியேற்பில் பங்கேற்கவில்லை. இதைத் தொடா்ந்து, பேரவைத் தலைவா் மு.அப்பாவு முன்னிலையில் ஒட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக, சனிக்கிழமை உறுதியேற்றுக் கொண்டாா் எம்.சி.சண்முகையா. பேரவைத் தலைவா் அறையில் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. உளமார என்ற சொல்லை பயன்படுத்தி சண்முகையா, உறுதியேற்றுக் கொண்டாா்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின், பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து, கரோனா நிவாரண நிதியாக, தங்களது ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக, முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பேரவைத் தலைவா் மு.அப்பாவு, துணைத் தலைவா் கு.பிச்சாண்டி ஆகியோா் அளித்தாா்.