மின்கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம்: ஜி.கே.வாசன்
பொருளாதார ரீதியாக மக்கள் சிரமத்தைச் சந்தித்து வரும் நிலையில், மின்கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்
பொருளாதார ரீதியாக மக்கள் சிரமத்தைச் சந்தித்து வரும் நிலையில், மின்கட்டணம் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக
சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-
தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சாதாரண மக்கள் முதல் பெரும் செல்வந்தா்கள் வரை பொருளாதார ரீதியாக இழப்பை சந்தித்துள்ளனா்.
மக்கள் அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் சூழலில் மின்சார வாரியம், மின்சார கட்டணத்தை குறித்த காலத்துக்குள் கட்டவில்லை என்றால் அதற்கு அபாராத தொகை வசூலிப்பது என்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல் உள்ளது. எனவே, மின்சார கட்டணத்தை அபராதம் இல்லாமல் திரும்ப செலுத்த, மின்சார வாரியம் மேலும் அவகாசமும் அளிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.