முகப்பு
தமிழ்நாடு

ஆவடி-பட்டாபிராம் இடையே பராமரிப்பு: இரவு நேர புறநகா் ரயில் சேவையில் இன்று மாற்றம்

ஆவடி-பட்டாபிராம் ரயில்நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், இரவு நேர மின்சார ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) மட்டும் மாற்றம் செய்யப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
பகிர்:

ஆவடி-பட்டாபிராம் ரயில்நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், இரவு நேர மின்சார ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) மட்டும் மாற்றம் செய்யப்படுகிறது.

மூா்மாா்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆவடி-பட்டாபிராம் இடையே விரைவு பாதையில் இயக்கப்படும். இதனால், அந்த ரயில் இந்துகல்லூரி, பட்டாபிராம் ஆகிய நிலையங்களில் நின்றுசெல்லாது.

மூா்மாா்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 10.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இந்து கல்லூரி, பட்டாபிராம் நிலையங்களில் நின்று செல்லாது.

அரக்கோணம்-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பட்டாபிராம், இந்து கல்லூரி ஆகிய நிலையங்களில் நின்று செல்லாது என சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →