தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,
வெப்பசலனம் காரணமாக இன்று சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், ஜூன் 26ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களிலும், ஜூன் 25ஆம் தேதி உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும்.
ஜூன் 27ஆம் தேதி வட மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.