முகப்பு
தமிழ்நாடு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருப்பூரில் விவசாயிகள் தர்னா

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி திருப்பூரில் விவசாயிகள் சனிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருப்பூரில் விவசாயிகள் தர்னா
பகிர்:

திருப்பூர்: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி திருப்பூரில் விவசாயிகள் சனிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஆளுநர் மாளிகை முன்பாகவும், நாட்டின் இதர பகுதிகளிலும் சனிக்கிழமை (ஜூன் 26) தர்ணா போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த தர்னாவுக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார் தலைமை வகித்தார்.  

இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: தில்லியில் 200 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்டத் தொகுப்புக்களையும், மின்சார சட்ட திருத்த மசோதாவையும் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். கருத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைப் பறிக்கக்கூடாது என்றனர்.  

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக சனிக்கிழமை தர்னாவில் ஈடுபட்ட விவசாயிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →