தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யத்துக்கு புதிய நிர்வாகிகள்: ஆலோசகராக பழ.கருப்பையா நியமனம்

DIN

மக்கள் நீதி மய்யத்திற்கு புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் ஆலோசகராக பழ.கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தை சேர்த்த ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த மாநில நிர்வாகிகளான சந்தோஷ் பாபு, குமரவேல் உள்ளிட்ட பலர் விலகினார்கள்.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகளை நியமித்து இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கட்சியின் அரசியல் ஆலோசகர்களாக பழ.கருப்பையா மற்றும் பொன்ராஜ், துணைத் தலைவர்களாக ஏ.ஜி.மெளரியா மற்றும் தங்கவேலு, மாநில செயலாளர்களாக செந்தில் ஆறுமுகம், சிவ.இளங்கோ மற்றும் சரத்பாபு, நிர்வாக குழு உறுப்பினர்களாக ஸ்ரீப்ரியா சேதுபதி, நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளராக ஜி.நாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT