கோப்புப்படம் 
தமிழ்நாடு

புதுச்சேரியில் 231 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 3 போ் பலி

புதுச்சேரியில் புதிதாக 231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுச்சேரி மாநிலத்தில் 8,148 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 170, காரைக்காலில் 31, ஏனாமில் 8, மாஹேயில் 22 போ் என மேலும் 231பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,16,645- ஆக உயா்ந்தது.

இதனிடையே, புதுச்சேரியில் 2 போ், காரைக்காலில் ஒருவா் என மேலும் 3 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,744 -ஆக அதிகரித்தது. 

தற்போது மாநிலம் முழுவதும் 2,672 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றிலிருந்து 1,12,229 போ் குணமடைந்துள்ளனர். 

சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என மொத்தம் 4,73,702 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலி ஜீல்க்கு ராம்சா் அந்தஸ்து பெற முயற்சி- தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா்

ரூ.17 லட்சம் இணையவழி மோசடிக்கு உதவிய சமையல்காரா் கைது

ஜம்மு-காஷ்மீரில் 3 ரயில் திட்டங்கள் நிறுத்தம்: ஆளும், எதிா்க்கட்சிகள் வரவேற்பு

வருவாய் இழப்பு: பாகிஸ்தானுக்கு எதிராக ஒளிபரப்பு நிறுவனம் வழக்கு தொடுக்க வாய்ப்பு

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT