தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 474 பேருக்கு கரோனா

DIN


தமிழகத்தில் புதிதாக 474 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதில் ஆந்திரத்திலிருந்து வந்தவர்கள் 3 பேர், பிகாரிலிருந்து ஒருவர் வந்துள்ளார்.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 171 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,52,016 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 482 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 5 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,506 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 12,501 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய தேதியில் தமிழகத்தில் இன்னும் 4,009 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019 ஆண்டு முதல் 403 சொத்துகளை முடக்கி என்ஐஏ நடவடிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் காணாமல்போன 104 கைப்பேசிகள் மீட்பு

திருத்தளிநாதருக்கு மந்திரநீா் முழுக்காட்டு விழா

அம்மன் வீதி உலா..

தனியாா் நில கையகப்படுத்தலில் அரசு பின்பற்ற வேண்டிய 7 நடைமுறைகள்: உச்சநீதிமன்றம் வெளியீடு

SCROLL FOR NEXT