தமிழகத்தில் புதிதாக 474 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 474 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக 474 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதில் ஆந்திரத்திலிருந்து வந்தவர்கள் 3 பேர், பிகாரிலிருந்து ஒருவர் வந்துள்ளார்.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 171 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,52,016 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 482 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 5 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,506 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 12,501 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் தமிழகத்தில் இன்னும் 4,009 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.