தமிழ்நாடு

திமுக கூட்டணி: மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்

DIN


திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, இரண்டு கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்ற நிலையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்தது:

"திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடும். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும், எந்ததெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் பின்னர் முடிவு செய்யப்படும். இதுபற்றிய தகவல்கள் ஓரிரு நாள்களில் வெளியாகும்." 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT