தமிழ்நாடு

புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு மதிய உணவு திட்டம்: தமிழிசை ஆய்வு

DIN

புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மீண்டும் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது. அதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் ஆய்வு செய்தார்.

புதுச்சேரியில் கடந்தாண்டு மார்ச் மாதம் கரோனா பொது முடக்கத்தால், அரசுப்பள்ளிகளில் வழங்கப்பட்டு வந்த மதிய உணவு நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து நீண்ட இடைவெளி விடப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு பள்ளிகளில் மதிய உணவு வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடவடிக்கை எடுத்தார்.

இதன்படி செவ்வாய்க்கிழமை முதல் அரசுப்பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதனை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்,  ஆளுநரின் ஆலோசகர்கள் சி. சந்திரமௌலி, பி. மகேஸ்வரி ஆகியோருடன் நேரில் சென்று, புதுவை அருகே கலிதீர்த்தாள்குப்பம் அரசு மேனிலைப்பள்ளியில் மதிய உணவு வழங்குவதை பார்வையிட்டனர். 

அப்போது மதிய உணவை வாங்கி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சாப்பிட்டுப் பார்த்து தரத்தையும் ஆய்வு செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT