கன்னியாகுமரி வந்துள்ள அமித் ஷா, சுசீந்திரத்தில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை கன்னியாகுமரி வந்த அவர், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மக்களைவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் - மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து சுசீந்திரத்தில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார் அமித் ஷா.
'பாஜக சார்பில் போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணனை வெற்றி பெறச் செய்யுங்கள்; சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்' என்று அங்குள்ள செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.