தமிழ்நாடு

சமயபுரம் கோயிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

DIN

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அம்மனை தரிசித்து வழிபட்டார்.

விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திமுக-வின் சிறப்புப் பொதுக் கூட்டம், சிறுகனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதால், விமானம் மூலம் திருச்சிக்கு பிற்பகல் வருகை தந்தார் துர்கா ஸ்டாலின்.

பின்னர், கார் மூலம் சமயபுரம் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்து வழிபட்டார்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது. கோயிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின், பூக்கள் அடங்கிய தட்டுகள் மற்றும் மாலை அடங்கிய பூ தட்டுகளுடன் வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT