தமிழ்நாடு

சமயபுரம் கோயிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அம்மனை தரிசித்து வழிபட்டார்.

DIN

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அம்மனை தரிசித்து வழிபட்டார்.

விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திமுக-வின் சிறப்புப் பொதுக் கூட்டம், சிறுகனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதால், விமானம் மூலம் திருச்சிக்கு பிற்பகல் வருகை தந்தார் துர்கா ஸ்டாலின்.

பின்னர், கார் மூலம் சமயபுரம் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்து வழிபட்டார்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது. கோயிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின், பூக்கள் அடங்கிய தட்டுகள் மற்றும் மாலை அடங்கிய பூ தட்டுகளுடன் வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT