தற்போதைய கட்சிகள் அரசியலை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளனர்: சீமான் 
தமிழ்நாடு

தற்போதைய கட்சிகள் அரசியலை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளனர்: சீமான்

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நிரந்தரியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார். 

DIN

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நிரந்தரியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசியது:

தற்போதைய கட்சிகள் அரசியலை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி உள்ளனர். இதை நாங்கள் மாற்ற நினைக்கிறோம். தனி முதலாளிகளால் கல்வி, தண்ணீர் கொடுக்கும் போது அரசால் ஏன் செய்ய முடியாது
நாங்கள் கல்வி, குடிநீரை இலவசமாகக் கொடுக்க நினைக்கின்றோம். தமிழ்நாட்டில்  ஊழல் செய்யும் நோக்கில் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கையால் மின்வாரியத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

திமுக,அதிமுகவை வெல்ல வைப்பது வழக்கமான நிகழ்வு, நாம் தமிழரை வெற்றி பெற  வைப்பது ஒரு வரலாறு. இந்த முறை உதய சூரியன், இரட்டை இலையை மறந்து விவசாயியை நினைத்து வாக்களியுங்கள்.
ஒரு முறை 5 ஆண்டுகள் எங்களை நம்பி ஒப்படையுங்கள்.

விவசாயியை நன்றியுடன் நினைவு கூறுங்கள். வாக்குப் பதிவில் விவசாய சின்னத்தில் நன்றி எனத் தொடுங்கள். நாடும் மக்களும் நன்றாக வாழ நாம் தமிழர் ஆள வேண்டும் எனப் பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: திருச்சி சிவா குற்றச்சாட்டு

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT