பழனி சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராகப் போட்டியிட ஐ.பி.செந்தில்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெயர்: ஐ.பி.செந்தில்குமார்
பிறந்த தேதி: 9.06.1978
பெற்றோர் : ஐ.பெரியசாமி, சுசீலா
கல்வித் தகுதி: எம்.ஏ.பி.எல்.,
ஊர்: திண்டுக்கல்
தொழில்: வழக்குரைஞர்
சாதி: ஈசநாட்டுக் கள்ளர்
கட்சிப் பதவி: மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகவும், மாநில இளைஞரணி துணைச் செயலராக பதவி வகித்துள்ளார். தற்போது திண்டுக்கல் கிழக்கு மாவட்டதிமுக செயலராக உள்ளார்.
தேர்தல் அனுபவம்: பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த இவர், 2016ல் வெற்றிப் பெற்றார். தற்போது 3ஆவது முறையாக பழனித் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
குடும்பம்: மனைவி - மெர்ஸி, மகன் - செந்தூர் ஆதவன், மகள் - ஓவியா மீனாட்சி