வெள்ளக்கோவிலில் 5 பேருக்கு கரோனா
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
இது தொடர்பாக வெள்ளக்கோவில் வட்டார சுகாதார நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
கடந்த சில நாள்களாக இப்பகுதியில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைசியாக 51 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 5 பேருக்கு கரோனா இருப்பது தெரிய வந்தது.
மணலூரைச் சேர்ந்த 38 வயது ஆண், லக்கமநாயக்கன்பட்டி குறிச்சிவலசு ஆண் (62), வெள்ளக்கோவில் முத்தூர் சாலை கிழக்குப் பகுதி 43, 18 வயது தாய், மகள், உப்புப்பாளையம் கிழக்கு 20 வயது பெண் ஆகியோர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி, சானிடைசர் பயன்பாட்டை முறையாகப் பின்பற்றுமாறு மருத்துவ அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.