காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாகத் திகழ்வது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில். இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு விழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் கோவில் செயல் அலுவலர்கள் ஆ. குமரன், வெள்ளைச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கார்த்திகா, காஞ்சிபுரம் சஙகரமடத்தின் ஆஸ்தான ஸ்தபதி நந்தகுமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
Advertisement
விழாவினை தொடர்ந்து இம்மாதம் 23 ஆம் தேதி 63 நாயன்மார்கள் வீதி உலாவும் இரவு வெள்ளித் தேர் உற்சவமும் நடைபெறுகிறது. மறுநாள் 24 ஆம் தேதி கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இராமநாதசுவாமி இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் ஜெயா.மற்றும் செயல் அலுவலர் ந.தியாகராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.