100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி பெரியகுளம் பகுதியில் சிலம்பம் சுற்றி பேரணியில் ஈடுபட்ட அக்னீவிரனன் சிலம்ப மாணவர்கள் மற்றும் விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் 
தமிழ்நாடு

பெரியகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு சிலம்ப பேரணி

பெரியகுளத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் மற்றும் அக்னீவிரனன் சிலம்ப மாணவர்கள் இன்று சிலம்பம் சுற்றி

DIN



பெரியகுளத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் மற்றும் அக்னீவிரனன் சிலம்ப மாணவர்கள் இன்று சிலம்பம் சுற்றி பேரணியில் ஈடுபட்டனர்.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் துவக்கி வைத்தார். விழுதுகள் இளைஞர் மன்ற துணைச்செயலாளர் அஜீத்பாண்டி முன்னிலை வகித்தார்.

சிலம்ப மாணவர்கள் மற்றும் விழுதுகள் இளைஞர் மன்றத்தின் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி 100 சதவீதம் வடிவில் நின்று உறுதிமொழி எடுத்தனர்.

பெரியகுளம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்டனர். பின்னர் பெரியகுளம் பெருமாள் கோயில் அருகே முடிவடைந்தது. இந்த பேரணியில்  பெரியகுளம் நகராட்சி பொறியாளர் சண்மூகவடிவு, நகர அமைப்பாளர் நிஜந்தன், விழுதுகள் இளைஞர் மன்ற நிர்வாகி சௌந்தரபாண்டி, சிவனேஷ் மற்றும் அக்னீவிரனன் சிலம்ப ஆசான் முத்தையாமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT