தமிழ்நாடு

சங்ககிரி பேச்சியம்மன், ஓங்காளியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்புப் பூஜைகள்

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள அருள்மிகு பேச்சியம்மன், ஓங்காளியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

மதுரைவீரன் சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம். 
மதுரைவீரன் சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம். 

அருள்மிகு பேச்சியம்மன், ஓங்காளியம்மன் சுவாமிகளுக்கு அமாவாசையையொட்டி சந்தனம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. 

இக்கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு மதுரைவீரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி கோயில் பூசாரி மட்டும் பூஜைகளை செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT