24 மணி நேரம் ஓவியம் வரைந்து உலக சாதனைக்கு முயற்சி 
தமிழ்நாடு

24 மணி நேரம் ஓவியம் வரைந்து உலக சாதனைக்கு முயற்சி

உலக சாதனை படைக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த கணிதப் பட்டதாரியான சங்கீதா, தொடர்ந்து 24 மணி நேரம் ஓவியம் வரையத் தொடங்கியுள்ளார்.

DIN

உலக சாதனை படைக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த கணிதப் பட்டதாரியான சங்கீதா, தொடர்ந்து 24 மணி நேரம் ஓவியம் வரையத் தொடங்கியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வீரராகவர் தெருவைச் சேர்ந்த வேலாயுதம் மகள் சங்கீதா(21). இவர் இளங்கலை கணிதம் படித்துள்ளார். இவருக்கு ஓவியத்தில் ஆர்வம் உண்டு.

இந்நிலையில் வெர்ட்யூ புத்தக உலக சாதனைக்காக டூடுள் ஓவியம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமுடக்கத்தில் கரோனோ குறித்த விழிப்புணர்வு ஓவியத்தை தொடர்ந்து 24 மணி நேரம் வரைய முடிவெடுத்து செவ்வாய்க்கிழமை காலை 7.30மணிக்கு தொடங்கியுள்ளார். இவர் தொடர்ந்து புதன்கிழமை காலை வரை ஓவியம் வரைந்துக் கொண்டிருப்பார்.

இவருக்கு பெற்றோர் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT