முகப்பு
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அருகில் தலைமை அலுவலக பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு.
தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அருகில் தலைமை அலுவலக பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு.
பகிர்:

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார். 

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் கட்சியில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஆர். மகேந்திரன், முருகானந்தம் உள்ளிட்டோர் விலகினர். கமல், தமிழகத்தை செயற்படுத்துவதற்கு முன்னர் கட்சியை சீர்படுத்த வேண்டும் என்று டாக்டர் ஆர். மகேந்திரன் கூறியிருந்தார். 

இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளரான சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர் மற்றும் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். இது தனிப்பட்ட காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு. கமல் மற்றும் கட்சியினர் காட்டிய பாசத்திற்கும் நட்பிற்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →