முகப்பு
தமிழ்நாடு

சென்னை கிண்டி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பிபிஇ கிட் உடை அணிந்து கரோனா நோயாளிகளை விசாரிக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பகிர்:

சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

கிண்டி கிங் இன்ஸ்டியூட் கரோனா மருத்துவமனையில் முழுக்கவச உடையணிந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன், அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விசிக கட்சியைச் சேர்ந்த வன்னியரசு மற்றும் சகாயம் மீனா ஐ.ஏ.எஸ். உள்பட 500க்கும் மேற்பட்ட நோயாளிகளை சந்தித்து அவர்களது உடல்நலன் குறித்து கேட்டறிந்தார். 

மேலும் அங்குள்ள அலுவலரிடம் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். கிங் இன்ஸ்டிட்யூட் இயக்குனர் நாராயணன், அரசு அலுவலர்கள்  திமுக நிர்வாகிகள் எம். கிருஷ்ணமூர்த்தி, இ.ரா. துரைராஜ், தா.மோகன்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →