சென்னை உள்ளட்ட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனையை தமிழக அரசு நிறுத்தியுள்ளது.
கரோனா தொற்று பாதித்தோருக்கு ரெம்டெசிவிா் மருந்து வழங்கும் முறையை மேம்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரெம்டெசிவிர் மருந்தை தனியார் மருத்துவமனைகளிலேயே விற்பனை செய்ய அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை உள்ளட்ட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனையை தமிழக அரசு இன்று நிறுத்தியுள்ளது. அரசிடம் ரெம்டெசிவிரை பெறும் சிலர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வந்ததாலும் ரெம்டெசிவிர் விற்கப்பட்ட இடங்களில் மக்கள் அதிகளவில் கூடி கரோனா பரவும்நிலை ஏற்பட்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.