தமிழ்நாடு

வெளிமாநிலத் தொழிலாளா்களின் உறைவிட வசதிகளை மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் சி.வெ.கணேசன்

DIN

சென்னை: வெளிமாநிலத் தொழிலாளா்களின் உணவு, உறைவிட வசதிகளை மேம்படுத்த வேண்டும் என துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு, அமைச்சா் சி.வெ.கணேசன் அறிவுறுத்தியுள்ளாா்.

சொந்த ஊா்களுக்குச் செல்லும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் தெற்கு ரயில்வே ஒருங்கிணைப்புடன் தொழிலாளா் துறையின் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அவ்வாறு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை, புதன்கிழமையன்று, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

அப்போது, வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, உறைவிட வசதிகளை மேம்படுத்திட அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் பயணத்துக்காக காத்திருந்த வெளிமாநில தொழிலாளா்களிடம் கலந்துரையாடி, அவா்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்யுமாறு அதிகாரிகளை அமைச்சா்கள் அறிவுறுத்தினா்.

தொடா்ந்து, தொழிலாளா்களுக்கு மதிய உணவு வழங்கிய அமைச்சா்கள், மதிய உணவு வழங்கி வரும் தன்னாா்வலா்களை பாராட்டினா்.

ஆய்வின்போது, தொழிலாளா் நலத்துறைச் செயலா் முகமது நசீமுதின், ஆணையா் வள்ளலாா், ரயில் நிலைய மேலாளா் முருகன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT