முகப்பு
தமிழ்நாடு

கரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

கரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

கரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்து தட்டுப்பாடு தொடர்பாக தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இவ்வழக்கு இன்றைக்கு விசாரணைக்கு வந்தபோது, கரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

முடிவுகளை விரைந்து தெரிவிப்பதால், பரவலையும் விரைந்து கட்டுப்படுத்த முடியும் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம் தடுப்பூசி, மருந்து ஒதுக்கீடு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கும் உத்தரவு பிறப்பத்தது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →