தமிழ்நாடு

யாஸ் புயல் எதிரொலி: நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்

DIN

தூத்துக்குடி, நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (மே24) புயலாக மாறி வலுப்பெறுகிறது. இது திங்கள்கிழமை (மே 24) தீவிரமடைந்து ஒடிஸா, மேற்கு வங்க கடற்கரையை நோக்கி கடக்க வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக சென்னை மற்றும் தெற்கு அந்தமான் மேலும் வடக்கு அந்தமான் ஆகிய இடங்களில் பலத்த மழை செய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் தூத்துக்குடி, நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேசமயம், சென்னை எண்ணூர் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை யாஸ் புயலாக வலுவடையும் நிலையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT