கேரள சட்டப்பேரவைத் தலைவராக ராஜேஷ் தேர்வு
கேரள சட்டப்பேரவைத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரிதாலா தொகுதி எம்.எல்.ஏ. எம்.பி.ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரிதாலா தொகுதி எம்.எல்.ஏ. எம்.பி.ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளத்தில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
அவர்களுக்கு இடைக்கால பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த இந்திய தேசிய லீக் கட்சியைச் சேர்ந்தவரும் குன்னமங்கலம் தொகுதி எம்எல்ஏ-வுமான பி.டி.ஏ. ரஹீம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.